1030
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: |
|
| ஆண்டுகள்: |
|
| 1030 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1030 MXXX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1061 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 1783 |
| அர்மீனிய நாட்காட்டி | 479 ԹՎ ՆՀԹ |
| சீன நாட்காட்டி | 3726-3727 |
| எபிரேய நாட்காட்டி | 4789-4790 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1085-1086 952-953 4131-4132 |
| இரானிய நாட்காட்டி | 408-409 |
| இசுலாமிய நாட்காட்டி | 420 – 421 |
| சப்பானிய நாட்காட்டி | |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1280 |
| யூலியன் நாட்காட்டி | 1030 MXXX |
| கொரிய நாட்காட்டி | 3363 |
1030 (MXXX) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஏப்ரல் 30 – 36 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் கசினியின் மகுமூது சுல்தான் இறந்தார். ஆப்கானித்தான், ஈரான், மற்றும் இந்தியாவின் பகுதிகளை உள்ளடக்கிய காசுனவிது பேரரசனாக அவரது மகன் மசூத் ஆட்சியேறினான்.
- சூன் – அங்கேரியின் மன்னர் முதலாம் இசுடீவன் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் கொன்ராடின் ஆக்கிரமிப்புப் படைகளை செருமனிக்குப் பின்வாங்கச் செய்தான்.
- சூலை 29 – தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார். இவர் பின்னர் நோர்வேயின் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
- பிரெஞ்சு மன்னர் முதலாம் என்றி தனது தந்தை ராபர்ட்டிற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டான்.
- அசாசு சமரில் பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் ரொமானுசு சிரியாவைத் தாக்கித் தோல்வியடைந்தார்.